தனது எஸ்டேட் பாதிக்கப்படும் என்பதால் கே.பி.முனுசாமி தடுத்து வைத்திருக்கும் திட்டம்…ஸ்டாலின் பகீர்

 

தனது எஸ்டேட் பாதிக்கப்படும் என்பதால் கே.பி.முனுசாமி தடுத்து வைத்திருக்கும் திட்டம்…ஸ்டாலின் பகீர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதிக்கு உட்பட்ட சூடனூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.

தனது எஸ்டேட் பாதிக்கப்படும் என்பதால் கே.பி.முனுசாமி தடுத்து வைத்திருக்கும் திட்டம்…ஸ்டாலின் பகீர்

ஸ்டாலின் பேசியபோது, ’’அமைச்சர் இல்லாமலேயே ஒரு அமைச்சர் இருக்கிறார் என்றால் அது கே.பி.முனுசாமிதான். இப்பொழுது மாநிலங்களவை உறுப்பினராகத்தான் இருக்கிறார். ஆனாலும், அவர் அமைச்சர் போலவே நடந்துவருகிறார்.’’என்றார்.

’’பாலக்கோடு அருகே இருக்கும் தூள்செட்டி ஏரி உட்பட பல ஏரிகளுக்கு தென் பெண்ணை ஆற்று நீரினை கால்வாய் வழியாக அமைத்து ஏரிகளுக்கு தண்ணீர் விடுவது தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டில் தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தோம். இப்பாசனக் கால்வாயினை தர்மபுரி மாவட்டத்திற்கு இணைப்பு செய்திட்டால் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பயன் அடைவார்கள்’’என்று சொன்ன ஸ்டாலின்,

தனது எஸ்டேட் பாதிக்கப்படும் என்பதால் கே.பி.முனுசாமி தடுத்து வைத்திருக்கும் திட்டம்…ஸ்டாலின் பகீர்

’’ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தினை போல பெரிய அளவில் நிச்சயமாக மக்களுக்கு இத்திட்டம் பயன்பட்டு இருக்கும். ஆனால், இத்திட்டத்தில் சில சச்சரவுகளையும், சில தடங்கல்களையும் செய்துகொண்டிருக்கிறார் கே.பி.முனுசாமி என்று இந்த பகுதி மக்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இத்திட்டத்தினை நிறைவேற்றினால் கே.பி.முனுசாமியின் எஸ்டேட் பாதிக்கப்படும் என்று அதை வரவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறார் என்று ஊரே பேசிக்கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய நிலைமை’’ என்று குற்றம்சாட்டினார்.