விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை.. 4 தினங்களில் சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்வு

 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை.. 4 தினங்களில் சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. 4 தினங்களில் ஒட்டு மொத்த அளவில் சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்ந்தது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. வாரத்தின் முதல் நாளான கடந்த திங்கட்கிழமையும், இன்றும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. இந்த வாரம் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டது குறிப்பிடத்தக்கது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை.. 4 தினங்களில் சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்வு
சென்செக்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.255.54 லட்சம் கோடியாக இருந்தது கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 3) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.254.18 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.36 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை.. 4 தினங்களில் சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்வு
பங்கு வர்த்தகம் ஏற்றம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 175.12 புள்ளிகள் உயர்ந்து 58,305.07 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 45.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,369.25 புள்ளிகளில் முடிவுற்றது.