பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.66 ஆயிரம் கோடி நஷ்டம்…

 

பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.66 ஆயிரம் கோடி நஷ்டம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 17 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. இருப்பினும் பின்னர் பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் எச்.டி.எப்.சி. மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில் டெக்மகிந்திரா மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.66 ஆயிரம் கோடி நஷ்டம்…
டெக் மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,335 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,840 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 142 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.254.33 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.66 ஆயிரம் கோடியை இழந்தனர்.

பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு.. முதலீட்டாளர்களுக்கு ரூ.66 ஆயிரம் கோடி நஷ்டம்…
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 17.43 புள்ளிகள் சரிந்து 58,279.48 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 15.70 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 17,362.10 புள்ளிகளில் முடிவுற்றது.