புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்தது

 

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்க பெடரல் வங்கி பத்திரங்கள் வாங்குவதை குறைக்கபோவதாகவும், அடுத்த ஆண்டு முதல் வட்டி விகித்தை உயர்த்த போவதாகவும் தகவல் வெளியானது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எல் அண்டு டி மற்றும் எச்.டி.எப்.சி. உள்பட மொத்தம் 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பார்தி ஏர்டெல் மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 4 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்தது
எல் அண்டு டி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,969 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,269 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.261.75 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.14 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 958 புள்ளிகள் உயர்ந்தது
சென்செக்ஸ்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 958.03 புள்ளிகள் உயர்ந்து 59,885.36 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 276.30 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,822.95 புள்ளிகளில் முடிவுற்றது.