சென்செக்ஸ் 78 புள்ளிகள் சரிவு.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.19 லட்சம் கோடி லாபம்…

 

சென்செக்ஸ் 78 புள்ளிகள் சரிவு.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.19 லட்சம் கோடி லாபம்…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 78 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும், அமெரிக்க பெடரல் வங்கி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தொடர்பான எதிர்பார்ப்பு, முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தது போன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் டெக்மகிந்திரா மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில் எச்.டி.எப்.சி. மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இன்போசிஸ் நிறுவன பங்கின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது.

சென்செக்ஸ் 78 புள்ளிகள் சரிவு.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.19 லட்சம் கோடி லாபம்…
எச்.டி.எப்.சி. நிறுவனம்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,102 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,135 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.258.60 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.19 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 78 புள்ளிகள் சரிவு.. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.19 லட்சம் கோடி லாபம்…
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 77.94 புள்ளிகள் சரிந்து 58,927.33 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 15.35 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 17,546.65 புள்ளிகளில் முடிவுற்றது.