புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 476 புள்ளிகள் உயர்ந்தது.

 

புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 476 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 476 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்காவில் பணவீக்கம் சாதகமான நிலையில் இருப்பது, சில தொழில்துறைகளுக்கு சாதகமான அரசின் முடிவுகள், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், என்.டி.பி.சி. மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஆக்சிஸ் வங்கி மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 476 புள்ளிகள் உயர்ந்தது.
பணவீக்கம்

.மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,055 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,246 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 120 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.259.68 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.13 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

புதிய உச்சத்தை தொட்ட பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 476 புள்ளிகள் உயர்ந்தது.
என்.டி.பி.சி.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 476.11 புள்ளிகள் உயர்ந்து 58,723.20 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 139.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17,519.45 புள்ளிகளில் முடிவுற்றது.