முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்த இந்த வார பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 424 புள்ளிகள் உயர்வு..

 

முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்த இந்த வார பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 424 புள்ளிகள் உயர்வு..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வார பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. 5 தினங்களில் சென்செக்ஸ் 424 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில்இந்த வாரம் முதல் 2 தினங்களில் பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. பின்னர் வந்த இன்று வரையிலான 3 வர்த்தக தினங்களில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. கொரோனா வைரஸ் நிலவரம், இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள், நிறுவனங்களின் நிதி முடிவுகள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் எதிரொலித்தன.

முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்த இந்த வார பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 424 புள்ளிகள் உயர்வு..
இந்திய ரிசர்வ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.211.21 லட்சம் கோடியாக இருந்தது கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 30) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.207.01 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.4.20 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

முதலீட்டாளர்களுக்கு லாபத்தை கொடுத்த இந்த வார பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 424 புள்ளிகள் உயர்வு..
பங்கு வர்த்தகம் ஏற்றம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 424.11 புள்ளிகள் உயர்ந்து 49,206.47 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 192.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,823.15 புள்ளிகளில் முடிவுற்றது.