சென்செக்ஸ் 14 புள்ளிகள் குறைந்தது… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் கோடி லாபம்

 

சென்செக்ஸ் 14 புள்ளிகள் குறைந்தது… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 14 புள்ளிகள் குறைந்தது.

தொடர்ந்து 2 வர்த்தக தினங்களாக சிறப்பாக இருந்த பங்கு வர்த்தகம் இன்று மந்தமாக இருந்தது. முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்ததே இதற்கு காரணம். சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 14 புள்ளிகள் குறைந்தது… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் கோடி லாபம்
ஏசியன் பெயிண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,790 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,337 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 154 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.219.14 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.18 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 14 புள்ளிகள் குறைந்தது… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் கோடி லாபம்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 14.37 புள்ளிகள் குறைந்து 50,637.53 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 10.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 15,208.45 புள்ளிகளில் முடிவுற்றது.