சென்செக்ஸ் 291 புள்ளிகள் வீழ்ச்சி… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் கோடி லாபம்

 

சென்செக்ஸ் 291 புள்ளிகள் வீழ்ச்சி… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 291 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சிறிய சரிவுடன் தொடங்கியது. பின்னர் வர்த்தகம் ஏற்றம் கண்டாலும் அதன் பிறகு பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில் மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 291 புள்ளிகள் வீழ்ச்சி… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் கோடி லாபம்
சன் பார்மா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,794 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,264 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 174 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.216.50 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ. 8 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 291 புள்ளிகள் வீழ்ச்சி… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் கோடி லாபம்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 290.69 புள்ளிகள் சரிந்து 49,902.64 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 77.95 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 15,030.15 புள்ளிகளில் முடிவுற்றது.