தொடரும் பங்குச் சந்தைகளின் ஏற்றம்… சென்செக்ஸ் 613 புள்ளிகள் உயர்ந்தது…

 

தொடரும் பங்குச் சந்தைகளின் ஏற்றம்… சென்செக்ஸ் 613 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 613 புள்ளிகள் உயர்ந்தது.

கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு குறைந்து வருவது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. 7 வாரங்களுக்கு பிறகு சென்செக்ஸ் மீண்டும் 50 ஆயிரம் புள்ளிகளை தாண்டியுள்ளது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், ஐ.டி.சி., டாக்டர்ரெட்டீஸ் மற்றும் ஸ்டேட் வங்கி ஆகிய 4 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.

தொடரும் பங்குச் சந்தைகளின் ஏற்றம்… சென்செக்ஸ் 613 புள்ளிகள் உயர்ந்தது…
ஐ.டி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,947 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,143 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 164 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.216.42 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.74 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

தொடரும் பங்குச் சந்தைகளின் ஏற்றம்… சென்செக்ஸ் 613 புள்ளிகள் உயர்ந்தது…
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 612.60 புள்ளிகள் உயர்ந்து 50,193.33 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 184.95 புள்ளிகள் ஏற்றம் கண்டு 15,108.10 புள்ளிகளில் முடிவுற்றது.