முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த இந்த வார பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 474 புள்ளிகள் சரிவு

 

முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த இந்த வார பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 474 புள்ளிகள் சரிவு

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 474 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு நேற்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை. ஆகையால் இந்த வாரம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைப்பெற்றது. கடந்த திங்கட்கிழமை மட்டும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் ஏற்றமும், தேசிய பங்குச் சந்தையில் சரிவும் கண்டது. மற்ற வர்த்தக தினங்களில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவு ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்தது, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, இந்தியாவின் கொரோனா நிலவரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த இந்த வார பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 474 புள்ளிகள் சரிவு
கொரோனா வைரஸ்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.210.60 லட்சம் கோடியாக இருந்தது கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (மே 7) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.211.21 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.61 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் கொடுத்த இந்த வார பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 474 புள்ளிகள் சரிவு
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 473.92 புள்ளிகள் குறைந்து 48,732.55 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 145.35 புள்ளிகள் சரிந்து கண்டு 14,677.80 புள்ளிகளில் முடிவுற்றது.