சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி நஷ்டம்

 

சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் அதன் பிறகு பங்கு வர்த்தகம் சரிவு காண தொடங்கியது. இருப்பினும் மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் முடிவடைந்தது. அதேசமயம் தேசிய பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஐ.டி.சி. உள்பட 10 மொத்தம் நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி நஷ்டம்
ஐ.டி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,400 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,689 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 151 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.210.60 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.41 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி நஷ்டம்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 41.75 புள்ளிகள் உயர்ந்து 48,732.55 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 18.70 புள்ளிகள் சரிவு கண்டு 14,677.80 புள்ளிகளில் முடிவுற்றது.