சென்செக்ஸ் 584 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லாபம்

 

சென்செக்ஸ் 584 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 584 புள்ளிகள் உயர்ந்தது.

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. பொருளாதாரம் மீண்டு வரும் நம்பிக்கை எதிரொலியாக அமெரிக்க பத்திரங்களில் வாயிலான முதலீடு அதிகரித்துள்ளது இது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், கோடக் மகிந்திரா வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பவர்கிரிட் மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 584 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லாபம்
எச்.டி.எப்.சி. வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,257 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,736 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 200 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.208.06 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 584 புள்ளிகள் உயர்ந்தது.. முதலீட்டாளர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி லாபம்
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 584.41 புள்ளிகள் உயர்ந்து 51,025.48 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 142.20 புள்ளிகள் ஏற்றம் கண்டு 15,098.40 புள்ளிகளில் முடிவுற்றது.