சென்செக்ஸ் 441 புள்ளிகள் வீழ்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.29 லட்சம் கோடி நஷ்டம்

 

சென்செக்ஸ் 441 புள்ளிகள் வீழ்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.29 லட்சம் கோடி நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 441 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது, அமெரிக்க பத்திரங்களில் மேற்கொள்ளும் முதலீட்டுக்கு கிடைக்கும் ஆதாயம் அதிகரிப்பு, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஓ.என்.ஜி.சி. மற்றும் மாருதி சுசுகி உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்பட மொத்தம் 27 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 441 புள்ளிகள் வீழ்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.29 லட்சம் கோடி நஷ்டம்
ஓ.என்.ஜி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,057 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,929 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 143 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.207.45 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.2.29 லட்சம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ் 441 புள்ளிகள் வீழ்ச்சி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.29 லட்சம் கோடி நஷ்டம்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 440.76 புள்ளிகள் சரிந்து 50,405.32 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 142.70 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,938.10 புள்ளிகளில் முடிவுற்றது.