தொடர் சரிவுக்கு பின் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 568 புள்ளிகள் உயர்ந்தது..

 

தொடர் சரிவுக்கு பின் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 568 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.51 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றம் மற்றும் வேலையின்மை குறைந்தது, இந்தியாவில் தடுப்பூசி போடுவது வேகமாக நடைபெறுவது, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பவர்கிரிட், இண்டஸ்இந்த் வங்கி,ஐ.டி.சி. மற்றும் மாருதி சுசுகி ஆகிய 4 நிறுவன பங்குகளை தவிர்த்து மற்ற 26 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.

தொடர் சரிவுக்கு பின் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 568 புள்ளிகள் உயர்ந்தது..
கோவிட்-19 தடுப்பூசி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,657 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,297 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 180 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.201.29 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.51 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

தொடர் சரிவுக்கு பின் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 568 புள்ளிகள் உயர்ந்தது..
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 568.38 புள்ளிகள் உயர்ந்து 49,008.50 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 182.40 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,507.30 புள்ளிகளில் முடிவுற்றது.