மீண்டும் சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 740 புள்ளிகள் வீழ்ச்சி..

 

மீண்டும் சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 740 புள்ளிகள் வீழ்ச்சி..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.3.73 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு குறைந்தது, கொரோனா வைரஸ் பரவல் பாதிப்பு அதிகரிப்பு போன்ற காரணங்களால் இன்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பலத்த சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாக்டர் ரெட்டீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட 4 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், மாருதி மற்றும் பார்தி ஏர்டெல் உள்பட 26 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மீண்டும் சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 740 புள்ளிகள் வீழ்ச்சி..
மாருதி சுசுகி இந்தியா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 757 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,191 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 173 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.198.78 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.3.73 லட்சம் கோடியை இழந்தனர்.

மீண்டும் சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 740 புள்ளிகள் வீழ்ச்சி..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 740.19 புள்ளிகள் சரிந்து 48,440.12 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 224.50 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,324.90 புள்ளிகளில் முடிவுற்றது.