தொடர்ந்து 2வது நாளாக ஏற்ற கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்ந்தது

 

தொடர்ந்து 2வது நாளாக ஏற்ற கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.69 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு உயர்ந்தது, கடந்த பிப்ரவரியில் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை சிறப்பாக இருந்தது, பொருளாதார வளர்ச்சி குறித்த நம்பிக்கை, முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் உயர்வு கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஓ.என்.ஜி.சி. மற்றும் எச்.டி.எப்.சி. நிறுவனம் உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக ஏற்ற கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்ந்தது
மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,859 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,152 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 166 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.206.57 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.69 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

தொடர்ந்து 2வது நாளாக ஏற்ற கண்ட பங்கு வர்த்தகம்.. சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்ந்தது
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 447.05 புள்ளிகள் உயர்ந்து 50,296.89 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 157.55 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,919.10 புள்ளிகளில் முடிவுற்றது.