5 தினங்களில் சென்செக்ஸ் 934 புள்ளிகள் சரிவு… முதலீட்டாளர்களுக்கு ரூ.4.40 லட்சம் கோடி நஷ்டம்

 

5 தினங்களில் சென்செக்ஸ் 934 புள்ளிகள் சரிவு… முதலீட்டாளர்களுக்கு ரூ.4.40 லட்சம் கோடி நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 934 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

கடந்த பிப்ரவரியில் மொத்த விலை பணவீக்கம் 27 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.17 சதவீதமாக உயர்ந்தது. நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவது, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் வீழ்ச்சி கண்டது.

5 தினங்களில் சென்செக்ஸ் 934 புள்ளிகள் சரிவு… முதலீட்டாளர்களுக்கு ரூ.4.40 லட்சம் கோடி நஷ்டம்
பணவீக்கம்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.203.44 லட்சம் கோடியாக குறைந்தது கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 12) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.207.84 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.4.40 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

5 தினங்களில் சென்செக்ஸ் 934 புள்ளிகள் சரிவு… முதலீட்டாளர்களுக்கு ரூ.4.40 லட்சம் கோடி நஷ்டம்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 933.84 புள்ளிகள் சரிந்து 49,858.24 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 286.95 புள்ளிகள் இறக்கம் கண்டு 14,744.00 புள்ளிகளில் முடிவுற்றது.