சென்செக்ஸ் 750 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.07 லட்சம் கோடி லாபம்..

 

சென்செக்ஸ் 750 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.07 லட்சம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 750 புள்ளிகள் உயர்ந்தது.

அமெரிக்காவில் அந்நாட்டின் பிரதிநிதிகள் சபையில் மிகப்பெரிய பொருளாதார ஊக்குவிப்பு நிதி தொகுப்பு நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதத்தில் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களின் வாகன விற்பனை சிறப்பாக இருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் பொருளாதாரம் வளர்ச்சி கண்டது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல் தவிர மற்ற 29 நிறுவன பங்குகளின் விலையும் உயர்ந்தது.

சென்செக்ஸ் 750 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.07 லட்சம் கோடி லாபம்..
பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,948 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,121 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 198 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.203.83 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.07 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 750 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.3.07 லட்சம் கோடி லாபம்..
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 749.85 புள்ளிகள் உயர்ந்து 49,849.84 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 232.40 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,761.55 புள்ளிகளில் முடிவுற்றது.