பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை குறைத்த ரிசர்வ் வங்கி.. சென்செக்ஸ் 132 புள்ளிகள் வீழ்ச்சி

 

பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை குறைத்த ரிசர்வ் வங்கி.. சென்செக்ஸ் 132 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் 132 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியது. இருப்பினும், ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாதது, இந்த நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை குறைத்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஓ.என்.ஜி.சி. மற்றும் பஜாஜ் பின்சர்வ் உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், நெஸ்லே இந்தியா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை குறைத்த ரிசர்வ் வங்கி.. சென்செக்ஸ் 132 புள்ளிகள் வீழ்ச்சி
இந்திய ரிசர்வ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,876 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,295 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 152 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.227.20 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.71 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

பொருளாதார வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை குறைத்த ரிசர்வ் வங்கி.. சென்செக்ஸ் 132 புள்ளிகள் வீழ்ச்சி
ஓ.என்.ஜி.சி.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 132.38 புள்ளிகள் குறைந்து 52,100.05 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 20.10 புள்ளிகள் இறக்கம் கண்டு 15,670.25 புள்ளிகளில் முடிவுற்றது.