சென்செக்ஸ் 85 புள்ளிகள் குறைந்தது… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.81 லட்சம் கோடி லாபம்

 

சென்செக்ஸ் 85 புள்ளிகள் குறைந்தது… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.81 லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 85 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே குறைந்தது, முதலீட்டாாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற காரணங்களால் இன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் பவர்கிரிட் உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஐ.டி.சி. மற்றும் டெக் மகிந்திரா உள்பட மொத்தம் 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 85 புள்ளிகள் குறைந்தது… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.81 லட்சம் கோடி லாபம்
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,145 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 970 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 169 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.224.65 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.81 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 85 புள்ளிகள் குறைந்தது… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.1.81 லட்சம் கோடி லாபம்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 85.40 புள்ளிகள் குறைந்து புள்ளிகளில் 51,849.48 நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 1.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு 15,576.20 புள்ளிகளில் முடிவுற்றது.