5 தினங்களில் ரூ.3.72 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 130 புள்ளிகள் வீழ்ச்சி

 

5 தினங்களில் ரூ.3.72 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 130 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. கடந்த 5 வர்த்தக தினங்களில் சென்செக்ஸ் 130 புள்ளிகள் குறைந்தது.

இந்த வாரம் கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. அதேசமயம் கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களிலும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. இன்று பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கமாக இருந்தது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவது, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற உள்நாட்டு நிலவரங்களும் மற்றும் அமெரிக்க பெடரல் வங்கி நிலைப்பாடு உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களும் இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

5 தினங்களில் ரூ.3.72 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 130 புள்ளிகள் வீழ்ச்சி
பணவீக்கம்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.227.44 லட்சம் கோடியாக இருந்தது கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 11) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.231.16 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.72 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

5 தினங்களில் ரூ.3.72 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 130 புள்ளிகள் வீழ்ச்சி
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 130.31 புள்ளிகள் குறைந்து 52,344.45 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 116 புள்ளிகள் சரிவு கண்டு 15,683.35 புள்ளிகளில் முடிவுற்றது.