சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.93 ஆயிரம் கோடி நஷ்டம்

 

சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.93 ஆயிரம் கோடி நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கமாக இருந்தது. சென்செக்ஸ் புள்ளிகள் 21 உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில்இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் பின்னர் சரிவு கண்டது. இருப்பினும் பின்னர் மெல்ல மெல்ல ஏற்றம் கண்டு இறுதியில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஓ.என்.ஜி.சி. மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.93 ஆயிரம் கோடி நஷ்டம்
இந்துஸ்தான் யூனிலீவர்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,198 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,013 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 141 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.227.44 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.93 ஆயிரம் கோடி நஷ்டம் கிடைத்தது.

சென்செக்ஸ் 21 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.93 ஆயிரம் கோடி நஷ்டம்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 21.12 புள்ளிகள் உயர்ந்து 52,344.45 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 8.05 புள்ளிகள் சரிவு கண்டு 15,683.35 புள்ளிகளில் முடிவுற்றது.