இந்த வாரமும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்.. 5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.96 லட்சம் கோடி லாபம்

 

இந்த வாரமும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்.. 5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.96 லட்சம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. 5 தினங்களில் சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச்சந்தைகளில் இந்த வாரம் கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மட்டும் பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. மற்ற 3 தினங்களில் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. நம் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவது, நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது மற்றும் சர்வதேச நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் எதிரொலித்தது.

இந்த வாரமும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்.. 5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.96 லட்சம் கோடி லாபம்
கொரோனா வைரஸ்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.231.16 லட்சம் கோடியாக இருந்தது கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 4) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.227.20 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.96 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இந்த வாரமும் ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்.. 5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.96 லட்சம் கோடி லாபம்
பங்கு வர்த்தகம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 374.71 புள்ளிகள் உயர்ந்து 52,474.76 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 129.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு 15,799.35 புள்ளிகளில் முடிவுற்றது.