சென்செக்ஸ் 3 புள்ளிகள் குறைந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி நஷ்டம்

 

சென்செக்ஸ் 3 புள்ளிகள் குறைந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 3 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் இந்த ஏற்றம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பின்பு பங்கு வர்த்தகம் படிப்படியாக சரிவு கண்டது. இறுதி பங்கு வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஓ.என்.ஜி.சி. மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 3 புள்ளிகள் குறைந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி நஷ்டம்
ஓ.என்.ஜி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,327 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,810 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 133 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.222.84 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.19 ஆயிரம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ் 3 புள்ளிகள் குறைந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.19 ஆயிரம் கோடி நஷ்டம்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2.56 புள்ளிகள் சரிந்து 51,934.88 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 7.95 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 15,574.85 புள்ளிகளில் முடிவுற்றது.