மீண்டும் புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.53 ஆயிரம் கோடி நஷ்டம்

 

மீண்டும் புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.53 ஆயிரம் கோடி நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 546 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், எச்.டி.எப்.சி. மற்றும் கோடக் மகிந்திரா வங்கி உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டைட்டன் மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மீண்டும் புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.53 ஆயிரம் கோடி நஷ்டம்
கோடக் மகிந்திரா வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,145 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,109 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 118 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.239.55 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.53 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

மீண்டும் புதிய உச்சத்தில் பங்குச் சந்தைகள்… முதலீட்டாளர்களுக்கு ரூ.53 ஆயிரம் கோடி நஷ்டம்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 546.41 புள்ளிகள் உயர்ந்து 54,369.77 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 128.05 புள்ளிகள் ஏற்றம் கண்டு 16,258.80 புள்ளிகளில் முடிவுற்றது.