5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.49 ஆயிரம் கோடி லாபம்… சென்செக்ஸ் 389 புள்ளிகள் குறைந்தது..

 

5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.49 ஆயிரம் கோடி லாபம்… சென்செக்ஸ் 389 புள்ளிகள் குறைந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் சரிவை சந்தித்தது. ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.49 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் கடந்த வியாழன்கிழமையை தவிர்த்து மற்ற 4 தினங்களிலும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. முன்னணி நிறுவனங்களின் கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகள், சர்வதேச நிலவரங்கள், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, கொரோனா நிலவரம் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.49 ஆயிரம் கோடி லாபம்… சென்செக்ஸ் 389 புள்ளிகள் குறைந்தது..
கொரோனா வைரஸ் பரிசோதனை

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.235.61 லட்சம் கோடியாக இருந்தது கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 23) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ..235.12 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.49 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

5 தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.49 ஆயிரம் கோடி லாபம்… சென்செக்ஸ் 389 புள்ளிகள் குறைந்தது..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 388.96 புள்ளிகள் குறைந்து 52,586.84 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 93.00 புள்ளிகள் சரிவு கண்டு 15,763.05 புள்ளிகளில் முடிவுற்றது.