சென்செக்ஸ் 66 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி லாபம்

 

சென்செக்ஸ் 66 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 66 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் வர்த்தகத்தின் இறுதியில் திடீர் சரிவு ஏற்பட்டது. இதனால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், சன்பார்மா மற்றும் டெக்மகிந்திரா உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்பட 17 மொத்தம் நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 66 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி லாபம்
பஜாஜ் பைனான்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,846 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,388 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 133 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.235.61 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.30 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 66 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி லாபம்
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 66.23 புள்ளிகள் சரிந்து 52,586.84 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 15.40 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 15,763.05 புள்ளிகளில் முடிவுற்றது.