சென்செக்ஸ் 135 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.36 ஆயிரம் கோடி நஷ்டம்

 

சென்செக்ஸ் 135 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.36 ஆயிரம் கோடி நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 3வது நாளாக இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 135 புள்ளிகள் குறைந்தது.

மந்தமான சர்வதேச நிலவரம் காரணமாக இன்று இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் முன்னணி நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டியது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல் மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், கோடக்மகிந்திரா வங்கி மற்றும் டாக்டர் ரெட்டீஸ் உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 135 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.36 ஆயிரம் கோடி நஷ்டம்
பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,419 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,783 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 131 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.233.85 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.36 ஆயிரம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ் 135 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.36 ஆயிரம் கோடி நஷ்டம்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 135.05 புள்ளிகள் சரிந்து 52,443.71 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 37.05 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 15,709.40 புள்ளிகளில் முடிவுற்றது.