சென்செக்ஸ் 274 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி லாபம்

 

சென்செக்ஸ் 274 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 274 புள்ளிகள் குறைந்தது.

தொடர்ந்து 2வது வர்த்தக தினமான இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பின்னடைவை சந்தித்தது. இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் சற்று நேரத்துக்கு பிறகு படிப்படியாக வீழ்ச்சி காண தொடங்கியது. இறுதியில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டாடா ஸ்டீல் மற்றும் பஜாஜ் பின்சர்வ் உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டாக்டர் ரெட்டீஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 274 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி லாபம்
டாடா ஸ்டீல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,599 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,663 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 113 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.234.21 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.5 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 274 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி லாபம்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 273.51 புள்ளிகள் சரிந்து 52,578.76 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 78.00 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 15,746.45 புள்ளிகளில் முடிவுற்றது.