சென்செக்ஸ் 124 புள்ளிகள் வீழ்ச்சி… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி லாபம்

 

சென்செக்ஸ் 124 புள்ளிகள் வீழ்ச்சி… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி லாபம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 124 புள்ளிகள் குறைந்தது.

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பின்னடைவை சந்தித்தது. முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டியது போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பஜாஜ் பின்சர்வ் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 11 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 124 புள்ளிகள் வீழ்ச்சி… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி லாபம்
எஸ்.பி.ஐ.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,837 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,513 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 159 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.235.16 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.4 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

சென்செக்ஸ் 124 புள்ளிகள் வீழ்ச்சி… ஆனாலும் முதலீட்டாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி லாபம்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 123.53 புள்ளிகள் சரிந்து52,852.27 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 31.60 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 15,824.45 புள்ளிகளில் முடிவுற்றது.