தொடர்ந்து அடி வாங்கும் பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 355 புள்ளிகள் குறைந்தது..

 

தொடர்ந்து அடி வாங்கும் பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 355 புள்ளிகள் குறைந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 355 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது.

ஆசிய மேம்பாட்டு வங்கி இந்த நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டை குறைத்துள்ளது. மேலும் முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற பல்வேறு காரணங்களால் இன்று பங்கு வர்த்தம் சரிவு கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமெண்ட் உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் டாடா ஸ்டீல் உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து அடி வாங்கும் பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 355 புள்ளிகள் குறைந்தது..
ஏசியன் பெயிண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,139 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,095 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 109 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.231.03 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.2.20 லட்சம் கோடியை இழந்தனர்.

தொடர்ந்து அடி வாங்கும் பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 355 புள்ளிகள் குறைந்தது..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 354.89 புள்ளிகள் சரிந்து 52,198.51 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 120.30 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 15,632.10 புள்ளிகளில் முடிவுற்றது.