முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்… 5 நாளில் ரூ.6.39 லட்சம் கோடி லாபம்..

 

முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்… 5 நாளில் ரூ.6.39 லட்சம் கோடி லாபம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரமும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. 5 நாளில் சென்செக்ஸ் 914 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் முதல் 2 வர்த்தக தினங்களில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. ஆனால் அதற்கு அடுத்த 2 தினங்களிலும் (புதன், வியாழன்) சரிவை சந்தித்தன. இருப்பினும் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் அமோகமாக இருந்தது. கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பான சாதகமான தகவல்கள், அமெரிக்க அதிபராக பைடன் அறிவிப்பு, நிறுவனங்களின் நிதி நிலை குறித்த எதிர்பார்ப்புகள் போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் ஏற்றத்துக்கு துணை புரிந்தன. இருப்பினும், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது போன்றவை பங்கு சந்தையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது.

முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்… 5 நாளில் ரூ.6.39 லட்சம் கோடி லாபம்..
கோவிட்-19 தடுப்பூசி

கடந்த திங்கட்கிழமை முதல் இன்று வரையிலான 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.195.63 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 1) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.189.24 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.6.39 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்… 5 நாளில் ரூ.6.39 லட்சம் கோடி லாபம்..
பங்கு வர்த்தகம் ஏற்றம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 913.53 புள்ளிகள் உயர்ந்து 48,782.51 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 328..75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,347.25 புள்ளிகளில் முடிவுற்றது.