சர்வதேச நிலவரங்களால் களை கட்டிய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 689 புள்ளிகள் உயர்ந்தது..

 

சர்வதேச நிலவரங்களால் களை கட்டிய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 689 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.37 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.


ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது, நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு நிதி முடிவுகள் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, அமெரிக்க அதிபராக பைடன் வெற்றி பெற்றதாக அறிவிப்பு போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மாருதி, டெக் மகிந்திரா மற்றும் இன்போசிஸ் உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இண்டஸ்இந்த் வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சர்வதேச நிலவரங்களால் களை கட்டிய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 689 புள்ளிகள் உயர்ந்தது..
பாரத ஸ்டேட் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,763 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,355 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 149 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.195.63 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.37 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

சர்வதேச நிலவரங்களால் களை கட்டிய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 689 புள்ளிகள் உயர்ந்தது..
பங்கு வர்த்தகம் உயர்வு

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 689.19 புள்ளிகள் உயர்ந்து 48,782.51 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 209.90 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,347.25 புள்ளிகளில் முடிவுற்றது.