தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள்.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.82 ஆயிரம் கோடி லாபம்..

 

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள்.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.82 ஆயிரம் கோடி லாபம்..

பங்குச் சந்தைகளில் தொடர்ந்து 2வது நாளாக பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் 81 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் பின்னர் வர்த்தகம் தொடர்ந்து சரிவு காண தொடங்கியது. இறுதியில் பங்கு வர்த்தகம் சிறிய இறக்கத்துடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டைட்டன். நெஸ்லே இந்தியா மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள்.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.82 ஆயிரம் கோடி லாபம்..
பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,968 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,108 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 151 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.193.26 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.82 ஆயிரம் கோடி லாபம் கிடைத்தது.

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்குச்சந்தைகள்.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.82 ஆயிரம் கோடி லாபம்..
மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 80.74 புள்ளிகள் சரிந்து 48,093.32 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 8.90 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,137.35 புள்ளிகளில் முடிவுற்றது.