சென்செக்ஸ் 264 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடி நஷ்டம்..

 

சென்செக்ஸ் 264 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவு கண்டது. முதலீட்டாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

கடந்த சில வர்த்தக தினங்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த பங்குச் சந்தைகள் இன்று சரிவை சந்தித்தன. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது போன்றவை இதற்கு காரணம். சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பவர்கிரிட், பார்தி ஏர்டெல் மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட மொத்தம் 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஐ.டி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் உள்பட மொத்தம் 19 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 264 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடி நஷ்டம்..
ஐ.டி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,549 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,556 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 128 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.192.44 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.42 ஆயிரம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ் 264 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.42 ஆயிரம் கோடி நஷ்டம்..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 263.72 புள்ளிகள் சரிந்து 48,174.06 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 53.25 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,146.25 புள்ளிகளில் முடிவுற்றது.