சென்செக்ஸ் 536 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.46 லட்சம் கோடி நஷ்டம்..

 

சென்செக்ஸ் 536 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.46 லட்சம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 536 புள்ளிகள் குறைந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு சரிவு, லாப நோக்கில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்தது, பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் மாருதி உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 536 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.46 லட்சம் கோடி நஷ்டம்..
மாருதி சுசுகி இந்தியா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,558 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,317 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 165 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.188.20 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.1.46 லட்சம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ் 536 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.46 லட்சம் கோடி நஷ்டம்..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 535.57 புள்ளிகள் சரிந்து 46,874.36 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 149.95 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 13,817.55 புள்ளிகளில் முடிவுற்றது.