மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 938 புள்ளிகள் வீழ்ச்சி..

 

மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 938 புள்ளிகள் வீழ்ச்சி..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.61 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

கடந்த சில தினங்களாக அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குகளில் மேற்கொண்டு இருந்த முதலீட்டை திரும்ப பெற தொடங்கியுள்ளனர். லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது, அமெரிக்காவில் பொருளாதார ஊக்குவிப்பு நிதி தொகுப்பு தொடர்பாக நிலையற்ற தன்மை போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மோசமாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், டெக் மகிந்திரா மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 6 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஆக்சிஸ் வங்கி மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 24 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 938 புள்ளிகள் வீழ்ச்சி..
டெக் மகிந்திரா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,066 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,847 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 150 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.189.66 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.2.61 லட்சம் கோடியை இழந்தனர்.

மரண அடி வாங்கிய பங்குச் சந்தைகள்… சென்செக்ஸ் 938 புள்ளிகள் வீழ்ச்சி..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 937.66 புள்ளிகள் சரிந்து 47,409.93 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 271.40 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 13,967.50 புள்ளிகளில் முடிவுற்றது.