வாரத்தின் முதல் நாளில் முதலீட்டாளர்களை பதற வைத்த பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 531 புள்ளிகள் வீழ்ச்சி….

 

வாரத்தின் முதல் நாளில் முதலீட்டாளர்களை பதற வைத்த பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 531 புள்ளிகள் வீழ்ச்சி….

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.2.16 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது போன்ற பல்வேறு காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் படுத்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஆக்சிஸ் வங்கி மற்றும் பஜாஜ் ஆட்டோ உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

வாரத்தின் முதல் நாளில் முதலீட்டாளர்களை பதற வைத்த பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 531 புள்ளிகள் வீழ்ச்சி….
ஆக்சிஸ் வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 936 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,037 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 157 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.192.27 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.2.16 லட்சம் கோடியை இழந்தனர்.

வாரத்தின் முதல் நாளில் முதலீட்டாளர்களை பதற வைத்த பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 531 புள்ளிகள் வீழ்ச்சி….
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 530.95 புள்ளிகள் சரிந்து 48,347.59 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 133.00 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,238.90 புள்ளிகளில் முடிவுற்றது.