பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி லாபம்..

 

பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி லாபம்..

தொடர்ந்து 2வது தினமாக இன்றும் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 394 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே சிறிய சரிவு ஏற்பட்ட போதிலும் பின்பு தொடர்ந்து பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், மாருதி சுசுகி மற்றும் டெக் மகிந்திரா உள்பட 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், பவர்கிரிட் மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி லாபம்..
மாருதி சுசுகி இந்தியா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,582 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 164 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. 1,429 மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.197.71 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.48 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.


.

பங்குச் சந்தைகளில் தொடர் ஏற்றம்… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி லாபம்..
பங்கு வர்த்தகம் ஏற்றம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 393.83 புள்ளிகள் உயர்ந்து 49,792.12 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 123.55 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,644.70 புள்ளிகளில் முடிவுற்றது.