சென்செக்ஸ் 470 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.81 லட்சம் கோடி நஷ்டம்..

 

சென்செக்ஸ் 470 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.81 லட்சம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 470 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தக் சிறிய ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் பின்பு வர்த்தகம் ஒரு நிலையாக இல்லாமல் இருந்தது. இறுதியில் பெரிய சரிவுடன் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் முடிந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 4 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம் ஓ.என்.ஜி.சி. மற்றும் சன்பார்மா உள்பட மொத்தம் 26 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 470 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.81 லட்சம் கோடி நஷ்டம்..
சன் பார்மா

மும்பை பங்குச் சந்தையில் இன்று 938 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 2,089 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 145 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.192.67 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.2.81 லட்சம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ் 470 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.81 லட்சம் கோடி நஷ்டம்..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 470.40 புள்ளிகள் சரிந்து 48,564.27 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 152.40 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,281.30 புள்ளிகளில் முடிவுற்றது.