5 தினங்களில் சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்வு.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம்..

 

5 தினங்களில் சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்வு.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம்..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் ஏற்றம் கண்டது. அதேசமயம் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

இந்திய பங்குச் சந்தைகளில் கடந்த திங்கட்கிழமை நேற்று வரையிலான (5 தினங்கள்) இந்த வாரத்தில் ஒட்டு மொத்த அளவில் பங்கு வர்த்தகம் உயர்வு கண்டது. கடந்த புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களை தவிர்த்து மற்ற 3 தினங்களிலும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது, கடந்த டிசம்பரில் பணவீக்கம் குறைந்தது, தடுப்பூசி போடும் திட்டம் போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

5 தினங்களில் சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்வு.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம்..
கோவிட்-19 தடுப்பூசி

கடந்த திங்கட்கிழமை முதல் இன்று வரையிலான 5 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.195.48 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 8) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.195.63 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

5 தினங்களில் சென்செக்ஸ் 242 புள்ளிகள் உயர்வு.. ஆனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் கோடி நஷ்டம்..
பங்கு வர்த்தகம் உயர்வு

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 242.16 புள்ளிகள் உயர்ந்து 49,034.67 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 86.45 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,433.70 புள்ளிகளில் முடிவுற்றது.