சென்செக்ஸ் 549 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.17 லட்சம் கோடி நஷ்டம்

 

சென்செக்ஸ் 549 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.17 லட்சம் கோடி நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. சென்செக்ஸ் 549 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் பின்னர் பங்கு வர்த்தகம் தொடர்ந்து சரிவு கண்டது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்று தள்ளி, ரூபாயின் வெளிமதிப்பு சரிவு போன்ற காரணங்களால் பங்கு வர்த்தகம் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல் மற்றும் ஐ.டி.சி. உள்பட மொத்தம் 4 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், டெக்மகிந்திரா, எச்.சி.எல். டெக்னாலஜிஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட மொத்தம் 26 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சென்செக்ஸ் 549 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.17 லட்சம் கோடி நஷ்டம்
பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,083 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,942 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 138 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.195.48 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.2.17 லட்சம் கோடியை இழந்தனர்.

சென்செக்ஸ் 549 புள்ளிகள் வீழ்ச்சி… முதலீட்டாளர்களுக்கு ரூ.2.17 லட்சம் கோடி நஷ்டம்
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 549.49 புள்ளிகள் சரிந்து 49,034.67 நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 161.90 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 14,433.70 புள்ளிகளில் முடிவுற்றது.