2021ம் ஆண்டை உயர்வுடன் தொடங்கிய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 118 புள்ளிகள் உயர்ந்தது…

 

2021ம் ஆண்டை உயர்வுடன் தொடங்கிய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 118 புள்ளிகள் உயர்ந்தது…

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.1.24 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

மாருதி சுசுகி இந்தியா உள்பட பல வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை கடந்த டிசம்பரில் ஏற்றம் கண்டுள்ளது, கோவிட்-19 தடுப்பூசி தொடர்பான முன்னேற்றம், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற பல்வேறு காரணங்களால் இன்று பங்குச் சந்தைகளில வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.டி.சி., டி.சி.எஸ். மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட மொத்தம் 21 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேசமயம், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் டைட்டன் உள்பட மொத்தம் 9 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

2021ம் ஆண்டை உயர்வுடன் தொடங்கிய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 118 புள்ளிகள் உயர்ந்தது…
ஐ.டி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 2,046 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 953 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 171 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.189.24 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.24 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

2021ம் ஆண்டை உயர்வுடன் தொடங்கிய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 118 புள்ளிகள் உயர்ந்தது…
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 117.65 புள்ளிகள் உயர்ந்து 47,868.98 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 36.75 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,018.50 புள்ளிகளில் முடிவுற்றது.