தொடர் சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 7 புள்ளிகள் உயர்ந்தது.

 

தொடர் சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 7 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கமாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.1.21 லட்சம் கோடி கிடைத்தது.

தொடர்ந்து 5 வர்த்தக தினங்களாக சரிவை மட்டும் சந்தித்து வந்த பங்கு வர்த்தகம் இன்று சிறிது ஏற்றம் கண்டது. காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பங்கு வர்த்தகம் நிலையற்ற நிலை நிலவியது. இறுதியில் பங்கு வர்த்தகம் சிறிய உயர்வுடன் முடிந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஓ.என்.ஜி.சி. மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், கோடக் மகிந்திரா வங்கி மற்றும் மாருதி உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர் சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 7 புள்ளிகள் உயர்ந்தது.
கோடக் மகிந்திரா வங்கி

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,687 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,233 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 161 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.201.39 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.1.21 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

தொடர் சரிவிலிருந்து மீண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 7 புள்ளிகள் உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 7.09 புள்ளிகள் உயர்ந்து 49,751.41 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 32.10 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,707.80 புள்ளிகளில் முடிவுற்றது.