சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 20 புள்ளிகள் குறைந்தது..

 

சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 20 புள்ளிகள் குறைந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.40 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

தொடர்ந்து கடந்த 6 வர்த்தக தினங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்கு வர்த்தகம் இன்று யார் கண்பட்டதோ தெரியவில்லை சரிவை சந்தித்தது. லாப நோக்கில் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததும் பங்கு வர்த்தகம் சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில் ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி. உள்பட மொத்தம் 14 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், எஸ்.பி.ஐ. மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 16 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 20 புள்ளிகள் குறைந்தது..
ஏசியன் பெயிண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,305 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,661 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 192 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.202.47 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.40 ஆயிரம் கோடியை இழந்தனர்.

சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்…. சென்செக்ஸ் 20 புள்ளிகள் குறைந்தது..
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 19.69 புள்ளிகள் சரிந்து 51,329.08 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 6.50 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 15,109.30 புள்ளிகளில் முடிவுற்றது.