வாரம் முழுவதும் முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 4,446 புள்ளிகள் உயர்ந்தது..

 

வாரம் முழுவதும் முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 4,446 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் முழுவதும் பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.14.21 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று வரையிலான கடந்த 5 வர்த்தக தினங்களிலும் பங்கு வர்த்தகம் ஏற்றத்தை மட்டுமே கண்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பங்குச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த ஜனவரியில் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை சிறப்பாக இருந்தது, பல முன்னணி நிறுவனங்களின் 2020 டிசம்பர் காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருந்தது, ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றங்களும் செய்யாதது போன்றவையும் இந்த வார பங்கு வர்த்தகத்தில் எதிரொலித்தது.

வாரம் முழுவதும் முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 4,446 புள்ளிகள் உயர்ந்தது..
மத்திய பட்ஜெட்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.200.33 லட்சம் கோடியாக உயர்ந்தது. கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 29) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.186.12 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.14.21 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

வாரம் முழுவதும் முதலீட்டாளர்களை குஷி படுத்திய பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 4,446 புள்ளிகள் உயர்ந்தது..
பங்கு வர்த்தகம்

நம் நாட்டு பங்குச் சந்தைகளில் நேற்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 4,445.86 புள்ளிகள் உயர்ந்து 50,731.63 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 1,289.65 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,924.25 புள்ளிகளில் முடிவுற்றது.