தொடர்ந்து 4வது தினமாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 359 புள்ளிகள் உயர்ந்தது..

 

தொடர்ந்து 4வது தினமாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 359 புள்ளிகள் உயர்ந்தது..

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. இருப்பினும் காலை 11 மணிக்கு பின் பங்கு வர்த்தகம் விறுவிறுவென ஏற்றம் கண்டது. பட்ஜெட் தாக்கம், முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கி குவித்தது போன்ற காரணங்களால் நேற்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஐ.டி.சி. மற்றும் ஸ்டேட் வங்கி உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் இண்டஸ்இந்த் வங்கி உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 4வது தினமாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 359 புள்ளிகள் உயர்ந்தது..
ஏசியன் பெயிண்ட்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,808 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,176 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 144 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.200.47 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

தொடர்ந்து 4வது தினமாக ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 359 புள்ளிகள் உயர்ந்தது..
பங்கு வர்த்தகம் உயர்வு

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 358.54 புள்ளிகள் உயர்ந்து 50,614.29 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 105.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 14,895.70 புள்ளிகளில் முடிவுற்றது.