5 தினங்களில் பங்குச் சந்தையில் ரூ.3.31 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 800 புள்ளிகள் வீழ்ச்சி

 

5 தினங்களில் பங்குச் சந்தையில் ரூ.3.31 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 800 புள்ளிகள் வீழ்ச்சி

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் ஒட்டு மொத்த அளவில் வர்த்தகம் வீழ்ச்சியை சந்தித்தது. சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில இந்த வாரம், வாரத்தின் முதல் வர்த்தக தினமான கடந்த திங்கள் மற்றும் கடைசி வர்த்தக தினமான இன்றும் பங்குச் சந்தைகள் வர்த்தகம் படுத்தது. கடந்த செவ்வாய் முதல் வியாழன் வரை பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டது. கொரோனா வைரஸ் பரவல், மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த எதிர்பார்ப்பு, முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்தது, பங்கு முன்பேர வர்த்தக கணக்கு முடிப்பு போன்றவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

5 தினங்களில் பங்குச் சந்தையில் ரூ.3.31 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 800 புள்ளிகள் வீழ்ச்சி
கொரோனா வைரஸ் பரிசோதனை


மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.200.81 லட்சம் கோடியாக உயர்ந்தது கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 12 ) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.204.12 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.3.31 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

5 தினங்களில் பங்குச் சந்தையில் ரூ.3.31 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் 800 புள்ளிகள் வீழ்ச்சி
பங்கு வர்த்தகம் வீழ்ச்சி


நம் நாட்டு பங்குச் சந்தைகளில் இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 799.77 புள்ளிகள் குறைந்து 49,099.99 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 452.60 புள்ளிகள் சரிவு கண்டு 14,529.15 புள்ளிகளில் முடிவுற்றது.