தொடர்ந்து 3வது நாளாக ஏற்றம்… சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்ந்தது

 

தொடர்ந்து 3வது நாளாக ஏற்றம்… சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்ந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால் பின்னர் பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கம் நிலவியது. இறுதியில் பங்கு வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், ஓ.என்.ஜி.சி. மற்றும் என்.டி.பி.சி. உள்பட மொத்தம் 18 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 12 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

தொடர்ந்து 3வது நாளாக ஏற்றம்… சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்ந்தது
ஓ.என்.ஜி.சி.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,784 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,173 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 171 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.206.22 லட்சம் கோடியாக உயர்ந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.20 லட்சம் கோடி லாபம் கிடைத்தது.

தொடர்ந்து 3வது நாளாக ஏற்றம்… சென்செக்ஸ் 258 புள்ளிகள் உயர்ந்தது
பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 257.62 புள்ளிகள் உயர்ந்து 51,039.31 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 115.35 புள்ளிகள் ஏற்றம் கண்டு 15,097.35 புள்ளிகளில் முடிவுற்றது.